நினைவுகளூடே நடந்திருந்தேன்
எல்லா வாசல்களுக்குமான
பள்ளி நோக்கி
ஆலயம் தோறும் தேவனைத்
தேடித் தேடி
அலுப்புற்ற வேளையில்
மதமற்றிருந்தேன்
மீண்டும் மீண்டுமான
தேடலின் எல்லையில்
நின்று பார்க்கையில்
நித்தம் நித்தம்
நகராதிருந்த
அல்லது
நகர்ந்து கொண்டிருந்த
நனவோடை
ஓரத்தில்
மதமுற்றிருந்தேன்
Friday, February 5, 2010
Subscribe to:
Posts (Atom)