Friday, February 5, 2010

எப்போதும் நான்

நினைவுகளூடே நடந்திருந்தேன்
எல்லா வாசல்களுக்குமான
பள்ளி நோக்கி
ஆலயம் தோறும் தேவனைத்
தேடித் தேடி
அலுப்புற்ற வேளையில்
மதமற்றிருந்தேன்
மீண்டும் மீண்டுமான
தேடலின் எல்லையில்
நின்று பார்க்கையில்
நித்தம் நித்தம்
நகராதிருந்த
அல்லது
நகர்ந்து கொண்டிருந்த
நனவோடை
ஓரத்தில்
மதமுற்றிருந்தேன்

3 comments:

  1. நல்லாருக்குடா மக்கா.

    சுந்தரா,

    தமிழ்மணம்,தமிழிஷ் ஓட்டுப் பட்டை,மற்றும் இரண்டு இடத்திலும் இணைக்க முயற்சி எடுடா.

    ReplyDelete
  2. sir..........word verification-i thookidungalen......plz:)

    ReplyDelete