Monday, January 25, 2010

நிதர்சனமானது

மிக வலுவான தூக்கமருந்து
என் கண்களில் கண்ணீர்
தோள்களைப் பிடித்துக் கொண்டேன்
கண்களில் தென்படும் அழகு,
இந்த அசுத்தம்.
சுத்தமானது.
இந்தச் சாவு உண்மையானது
இரண்டாவது முறையாக.
இதற்கு முன்னர் பேசியது
யாரோ வந்திருக்க வேண்டும்.
கைகளை நீட்டி அப்படியே
இறங்கி தெருவுக்கு முன்னால்
முதல் முறையாக
என் பார்வை சரியில்லை
சிறிது சிறிதாக கூட்டம்
கூடியது வண்டியில்
ஏறி விட்டேனா...
வண்டி என்மேல் ஏறியதா...
இந்தச் சாவு போலியானது.

1 comment: