எதையும் இசைக்காத போதும்
உன்னிலிருந்து பீறிடுகிறது
உன்மத்தமான இசையின்
உயிர் ஒலி.
எல்லையில்லா வெளிகளில்
எரிந்து கொண்டிருக்கிறது
வெளிப்படுத்திய விசேடங்கள்
சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்
தன் கை தேடி
சீழ்பிடித்த உடலுடன்
ஒரு சமூக அவலர்
சட்டங்களெல்லாம் அறையபட்டுவிட்டன
மரச்சட்டங்களில்
நலத்திட்டங்களுக்காக
நகராத வரிசைகளில் நாட்கணக்கில்...
ஆனாலும்
மறுவாழ்வு குறித்து
மாநாடு கூட்டினோம்
சாண்ட்லியர் வெளிச்சத்தில்
சாராயம் அருந்திக் கொண்டு
Subscribe to:
Post Comments (Atom)
:-)
ReplyDelete